search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு"

    • சமையல் அறையில் இருந்து மதிய உணவுக்காக தயார் செய்யப்பட்டு இருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தை ஊழியர்கள் வெளியே கொண்டுவந்தனர்.
    • மகந்தம்மாவுக்கு 50 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் அப்சல்பூர் தாலுகா சைனமகேரா கிராமத்தில் சீனமகேரா அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.

    கடந்த 16-ந் தேதி இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மகந்தம்மா சிவப்பா ஜமாதார் (7) என்ற சிறுமி தனது சக தோழிகளுடன் பள்ளி நடைபாதையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது சமையல் அறையில் இருந்து மதிய உணவுக்காக தயார் செய்யப்பட்டு இருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தை ஊழியர்கள் வெளியே கொண்டுவந்தனர். இதை கவனிக்காத சிறுமி மகந்தம்மா தன்னை துரத்திய மற்றொரு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தாள்.

    இதில் மகந்தம்மாவுக்கு 50 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு கலபுர்கியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி மகந்தம்மாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

    இதனிடையே சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பவத்தன்று விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லலாபி நடாப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜூ சவான் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மறுநாளே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதேபோல் பள்ளியின் தலைமை சமையல்காரரான கஸ்தூரிபாய் தாளக்கோரி என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    • மாணவனின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காரணம் என கவுதமின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
    • ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த அத்திமரத்துபள்ளத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 17). இவர் சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவர் பள்ளி ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவரது பெற்றோருக்கு புகார் சென்றது.

    இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார் கவுதமின் பெற்றோரை அழைத்து மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கவுதம் தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவரின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காரணம் என கவுதமின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாருக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார், பள்ளி ஆசிரியர்களிடம் நான் தான் தலைமை ஆசிரியர். அதை மறந்து விட்டீர்களா என கூறி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பில் இருந்த மேசை, ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

    ×